fbpx

பஞ்சாப் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு…! 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவு…!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது.

5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாதலுக்கு அவரது மகனும் சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மற்றும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் மகள் பர்னீத் கவுர் உள்ளனர்.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த வாரம் மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறிக்கை ஒன்றில், பிரகாஷ் சிங் பாதல் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் தீவிர அதிகரிப்புடன் ஏப்ரல் 16 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 18 ஆம் தேதி அவரது சுவாச நிலை மோசமடைந்ததால் மருத்துவ ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது.

Vignesh

Next Post

முறைகேடு வழக்கில் வசமாக சிக்கிய டெல்லி முன்னாள் முதல்வர்...! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்...!

Wed Apr 26 , 2023
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் […]

You May Like