ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி பொதுநல வழக்கு தொடர்ந்த நபர் வெட்டி படுகொலை…..! செங்கல்பட்டில் பரபரப்பு……!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன்(34). இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா,பருக்குடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இருவருக்கும் இடையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக, அவர்கள் சர்புதினுக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 2022 ஆம் வருடம் திருக்கழுக்குன்றம் சந்தை பகுதி மற்றும் மசூதி தெருவில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து சர்புதீன் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனுவை வழங்கி உள்ளார்.

இந்த புகார்கள் மற்றும் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனு மீது சரியான விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக, சர்புதீனுக்கு கொலை மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சென்ற 24 ஆம் தேதி திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கிய நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை மறுபடியும் சலீம் பாஷா என்பவர் கைபேசி மூலமாக நாளை உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த மிரட்டல் தொடர்பாக அவர் மீண்டும் அவருடைய வழக்கறிஞருடன் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் மனுவை வழங்கினார். அதன் பிறகு சென்னைக்கு செல்வதற்காக திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள மங்களம் பகுதியில் இருக்கின்ற உணவகத்தில் உணவு சாப்பிட்டு விட்டு சர்புதீன் காரில் சேரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்தது.

காரின் கண்ணாடி உடைத்த அந்த கும்பல் கார் கதவை திறந்து அவரை சரமாரியாக விட்டு படுகொலையை செய்தது. அவர் சம்பக இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப், மாமல்லபுரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துகளை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம், மன்சூர் அலி, சலீம் பாட்சா உள்ளிட்ட 10 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

”அது இல்லனா... கோடீஸ்வரனாக இருந்தா கூட எனக்கு வேண்டாம்”..!! பிரேக்கப் குறித்து நடிகை தர்ஷா குப்தா ஓபன் டாக்..!!

Mon May 1 , 2023
நடிகை தர்ஷா குப்தா முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனவர். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும், சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். சமீபத்திய பேட்டி ஒன்றில் […]
”அது இல்லனா... கோடீஸ்வரனாக இருந்தா கூட எனக்கு வேண்டாம்”..!! பிரேக்கப் குறித்து நடிகை தர்ஷா குப்தா ஓபன் டாக்..!!

You May Like