மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். 17 வயதான இவர் தற்போது பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில், அதே பள்ளியில் பயிலும் பாவானி (17) என்ற மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவனின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வீரபத்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த காதலி பவானியும் தன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் அறிந்த பாலமேடு போலீசார் விரைந்து வந்து இறந்த மாணவன், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.