fbpx

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முக்கிய புள்ளி..!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு திரும்பினார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இருமுறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அதிமுக தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 8.45மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை சீரானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடல் நலம் சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

அறைக்கு சென்று படுத்துறங்கிய மகள்…..! காலையில் பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..! காரணமென்ன….?

Fri Jun 23 , 2023
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி லக்ஷ்மணப் பெருமாள் இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவரும் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த நிலையில் இவரது 2வது மகள் சிவப்பிரியா என்பவர் 8ம் வகுப்புபடித்துவந்துள்ளார. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மாநடி சிவபெரியவை தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் போது வகுப்பு ஆசிரியர் ஏழாம் வகுப்பு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் […]

You May Like