அண்ணா பல்கலைக்கழகமாணவி பாலியல் வழக்கு… அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு…! டிஜிபி விளக்கம்…!

DGP sankar Jiwal 2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது செய்கின்றனர். தற்போது, 5 மாதங்கள் கழித்து ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது.

முதலில் அவரை ஏன் டிச.24-ம் தேதி விடுவித்தார்கள்.. ? ஆதாரங்களை அழிப்பதற்காகவா.? 23-ம் தேதி சம்பவம் முடிந்த சிறிது நேரத்தில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆய்வாளரைத் தொடர்புகொண்டு ஞானசேகரன் பேசியுள்ளார். அதன்பிறகு 9 நிமிடங்கள் கழித்து அந்த காவல்துறை அதிகாரி ஞானசேகரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசுகிறார். அந்த காவல்துறை அதிகாரி யார்? என்ற தகவலை 48 மணி நேரம் கழித்து வெளியிடுகிறேன். இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்; தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவில்லை. புள்ளி விவரங்களைப் பார்த்தால் இது தெளிவாக தெரியும். 2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், குறிப்பாக ரவுடி, பழிவாங்கும், சாதி மற்றும் சமூகவாத அடிப்படையிலான கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை. இதேபோல், போலியாக என்கவுண்டர்கள் நடத்தப்படுவது இல்லை. காவல் துறை சட்டப்படி, கடுமையான சூழ்நிலையில்தான் தற்காப்புக்காக இதுபோன்று செய்கிறது. போதை மற்றும் மயக்கப் பொருள் விநியோகத்தையும், தேவையையும் கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையும், அரசும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Read More: புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டம்..! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Vignesh

Next Post

டீயில் ரஸ்க் தொட்டு சாப்பிடுகிறீர்களா?. காமினேஷனே ரொம்ப ஆபத்து! இந்த தவறை செய்யவே கூடாது!.

Wed Jun 4 , 2025
டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]
tea rusk 11zon

You May Like