சென்னையில் கொரோனா வைரஸ்… மேலும் ஒருவர் பலி…! சுகாதாரத்துறை தகவல்…!

covid death 2025

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூதாட்டி ஒருவர் பலி என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்து உள்ளது.


மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதார மத்திய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மே 22-ஆம் தேதி 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3,758 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, பத்து நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 மடங்கு உயர்ந்து இருக்கிறது.

இந்தநிலையில், சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்தது. இதற்காக கீமோதெரபி சிகிச்சையில் அவர் இருந்து வந்தார். அதனுடன் சர்க்கரை நோய் மற்றும் நடுக்குவாதம் (பார்க்கின்சன்) பாதிப்பும் இருந்தது. இந்த நிலையில், அவருக்கு இதய செயலிழப்பும் ஏற்பட்டதால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கடந்த மாதம் 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில் ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக, புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்புக்கான சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூதாட்டிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான முக்கிய காரணம் இணைநோய்கள் தான் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More: 3-வது முறையாக மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடும் ஆர்பிஐ..!!

Vignesh

Next Post

ஒரு விரலில்தான் மெட்டி அணியவேண்டும்!. கோலம் போடும்போது இந்த தவறை செய்யாதீர்கள்!. பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள்!.

Wed Jun 4 , 2025
கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]
metti 11zon

You May Like