பெருங்குடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னை தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, கர்ப்பம் ஆக்கிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.
பெருங்குடி பகுதியில், இருக்கின்ற ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பணியாற்றி வரும், கரிஷ்மா என்ற இளம் பெண் தமிழக கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் மீது இந்த புகாரை வழங்கி உள்ளார்.
ராஜகோபால் சதீஷ் டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக, கிரிக்கெட் உலகத்திற்கு அறிமுகமாகி, பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ், கல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளில் இடம் பெற்று, விளையாடியிருக்கிறார்.
கடந்த 2017 ஆம் வருடம் அந்த இளம் பெண்ணும், ராஜகோபால் சதீஷும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையிலான பழக்கம் காதலாக மாறி, ராஜகோபால் சதீஷ், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக, தன்னுடைய சொந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று, பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு சதீஷ், தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களாக அங்கேயே தங்கி விட்டார். தன்னை வந்து பார்க்காததால், அந்த இளம் பெண் சதீஷின் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு சாம்பவி என்ற மனைவி இருந்ததை தெரிந்து கொண்டார். இதனால், அதிர்ச்சி அடைந்தவர், ராஜகோபால் சதீஷ் உடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
இந்த நிலையில் தான், கடந்த 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பரத் என்ற நபருடன் அந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால், இருவருக்கும் இடையிலான, அந்த திருமண வாழ்க்கை, மூன்று மாதமே நீடித்தது. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக, அவர்கள் பிரிந்து விட்டார்கள்.
பின்னர், பெருங்குடி பகுதியில், அந்த இளம் பெண் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்த போது, கடந்த மே மாதம் செல்போனின் மூலமாக, தொடர்பு கொண்ட ராஜகோபால் சதீஷ், நம்முடைய நட்பை மீண்டும் தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, மறுபடியும் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இந்த நிலையில் தான், சில மாதங்களுக்கு முன்னால், கொடைக்கானல் சென்று, அங்கே இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதன் காரணமாக, அந்த இளம் பெண் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த விவகாரம் பற்றி தெரிந்து கொண்ட ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி, அவருடைய தோழி சுரேகா உள்ளிட்டோர் தன்னுடைய கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று மிரட்டி வருவதாக அடையாறு காவல்துறை ஆணையரை சந்தித்து கரிஷ்மா புகார் மனுவை வழங்கி இருக்கிறார். ஆகவே தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.