மகிழ்ச்சி…! 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்கள்…! அரசு அதிரடி உத்தரவு…!

tn Govt subcidy 2025

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்; அலுவலகங்கள் / பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற / பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓய்வு பெற்ற சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள்/தலைமை ஆசிரியர் ஆகியோரின் பணிக்காலத்திற்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி, அலுவலகம் சார்ந்த தணிக்கை தடைகளுக்காக தனியரின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தல் கூடாது.


தணிக்கை அறிக்கை பெற்ற நிலையில், ஓய்வுப் பெற்ற / ஓய்வு பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் மீது தணிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை (Specific audit objection on wrong/excess salary received by concerned Chief Educational Officer /District Educational Officer Headmaster Teacher or any misappropriation of Government funds by concerned Officer, Headmaster / Teacher) ஏதுமில்லை என்ற நிலையில், ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்கப்படவேண்டும்.

ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பள்ளி / அலுவலகங்களில் அலுவலர் / தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் எழுப்பப்பட்டுள்ள இதா (நிதி சாராத) தணிக்கைத் தடைகள் காரணமாக சார்ந்த அலுவலர் / தலைமை ஆசிரியர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தல் கூடாது.

ஓய்வு பெற்ற அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பள்ளி / அலுவலகத்தில் பணம் பெற்று வழங்கும் அலுவலராக (Drawing and Disbursing Officer) பணிபுரிந்த காலத்தில், அவ்வலுவலகம் / பள்ளியின் கட்டுப்பாட்டின் கீழ் பணிப்புரியும் ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது எழுப்பப்பட்டுள்ள நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் ஏதேனும் இருப்பின், அதன் மீதும், கீழ்க்கண்ட நடைமுறைகளை உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்திய பின், தவறாது 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும்.

நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் / ஆசிரியர் அல்லாத பணியாளரின் தணிக்கைத் தடை விபரம் சார்ந்த ஆசிரியர் / ஆசிரியர் அல்லாத பணியாளரின் பணிப்பதிவேட்டில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் / ஆசிரியர் அல்லாத பணியாளர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றிருப்பின், தற்போது பணிபுரியும் பள்ளியில் பணிப்பதிவேட்டில் பதிவு மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் / பணியாளர் நீதிமன்ற வழக்கு தொடுத்திருப்பின் அவை சார்ந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பது உறுதி செய்யபப்பட வேண்டும்

எனவே அகத்தணிக்கைத் தடை சார்ந்த இனங்களில் மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஓய்வு பெற்ற அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

Read more: மனை விவரங்களை பதிவு செய்ய புதிய வெப்சைட்.. தமிழ்நாடு அரசு அசத்தல்..!! இனி வேலை ஈஸியா முடிஞ்சிடும்..

Vignesh

Next Post

மனை விவரங்களை பதிவு செய்ய புதிய வெப்சைட்.. தமிழ்நாடு அரசு அசத்தல்..!! இனி வேலை ஈஸியா முடிஞ்சிடும்..

Tue Jun 17 , 2025
நிலம் மற்றும் மனை விவகாரங்களில் துல்லியமான தகவல் மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுகளை ஆன்லைன் மயமாக்கி, இடைத்தரகர் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கீகாரமற்ற மனைகள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளமான www.tnlayoutreg.in தற்காலிகமாக செயலிழந்தது. இந்த தளத்தின் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக, […]
property 2

You May Like