மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர்.
அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் பல நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.
NotPetya Ransomware – 2017: உக்ரைனில் உள்ள நிறுவனங்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த தாக்குதல், உலகம் முழுவதும் பரவி பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்புகளை ஏற்படுத்தியது. மருந்து, உணவு, ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டன.
Viasat Satellite Attack – 2022: உக்ரைனின் செயற்கைக்கோள் நெட்வொர்க் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதனால் ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
WannaCry Ransomware – 2017: உலகம் முழுவதும் பரவிய இந்த ரான்சம்வேர் தாக்குதலில், 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள், ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஜெர்மனியின் ரயில்வே அமைப்புகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
உலகம் முழுவதும் பரவிய இந்த ரான்சம்வேர் தாக்குதலில், 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள், ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஜெர்மனியின் ரயில்வே அமைப்புகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
பாதுகாப்புக்கான பரிந்துரைகள்:
* வலுவான பாஸ்வேர்ட் பயன்படுத்துதல்
* Two-Factor Authentication (2FA) செயல்படுத்துதல்
* அப்டேட் செய்யப்படாத சாஃப்ட்வேர்கள், ஓஎஸ்-ஐ உடனுக்குடன் புதுப்பித்தல்
* சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம்
* நம்பகமான ஆண்டிவைரஸ் மென்பொருள் பயன்படுத்துதல்
Read more: கலாநிதி Vs தயாநிதி : “குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை..” சன் டிவி விளக்கம்..