2026 தேர்தலையொட்டி, திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்று இரவு திமுகவில் கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பரப்புரையின் போது திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கல்வியாளர் அணியின் தலைவராக புகழ்பெற்ற பேச்சாளர் புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 1ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், திமுகவில் கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 23-லிருந்து 25 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் திமுகவின் கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளர் எம்.பி. முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ. தங்கம் மற்றும் செயலாளராக பேராசிரியர் டி.எம்.என்.தீபக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் பரப்புரையின் போது திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கல்வியாளர் அணியின் தலைவராக புகழ்பெற்ற பேச்சாளர் புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read more: EB : இதை எல்லாம் உடனே செய்து முடிக்க வேண்டும்… மின்வாரியம் அதிரடி உத்தரவு…!