சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மீதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மற்றொரு டாக்சியில் வந்த தந்தை, கர்ப்பிணி மகள் உயிரிழந்தனர்.
இந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் வேங்கைவாசல் மகராஜபுரத்தை சேர்ந்த பத்மநாபன் (58), கர்ப்பிணியாக இருந்த அவரது மகள் தீபிகா (21) என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் காயம் அடைந்த பத்மநாபனின் மனைவி, ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்திற்குக் காரணமான கார் ஓட்டுநர் மணிகண்டன் மதுபோதையில் இருந்ததாகவும், அதே நேரத்தில் எதிர்திசையில் காரை ஓட்டி வந்ததாகவும் சிட்லபாக்கம் போலீசார் தெரிவித்தனர். அவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிதாபமான விபத்து, நகர சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டும் பழக்கத்தால் ஏற்படும் பெரும் உயிரிழப்புகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
Read more: மாதவிடாய் முதல் நீரிழிவு வரை.. வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?