பூந்தமல்லியில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு சென்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் 51-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ரத்த தானம் வழங்குதல், சிறப்பு பிரார்த்தனைகளை செய்தல், மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அந்த வகையில், சென்னை பூந்தமல்லி பகுதியில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கு படிப்பு உபகரணங்களை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விஜய் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டி, பொதுமக்களுக்குப் வழங்கப்பட்டது.
பூந்தமல்லி நசரத்பேட்டை கணபதி இவருடைய நண்பர் ராகுல் இருவரும், தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு, இரண்டு சக்கர வாகனத்தில் பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னாடி வந்த லாரி மோதியதில் கணபதி லாரி டயரில் சிக்கி பலத்த காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய நண்பர் ராகுல் காயமின்றி உயிர் தப்பினார்.
Read more: ஜுலை 1-ம் தேதி முதல் புதிய இணையதளம் மூலம் விண்ணப்பம்…! பத்திரப் பதிவுத்துறை சூப்பர் அறிவிப்பு…!