ஜூலை 7 முதல் 2026 ஜனவரி 30-ம் தேதி வரை… பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

School students 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரையும், 3-வது கட்டமாக நவம்பர் 3 முதல் 14-ம் தேதி வரையும், 4-ம் கட்டமாக 2026ம் ஆண்டு ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரையும் வினாடி -வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த வினாடி – வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பாசிரியர் மட்டுமே உருவாக்க வேண்டும். மேலும், மதிப்பீடு முடிந்த பின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை முறையாக பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

Read more: யாருகிட்ட.. அடி மடியிலேயே கை வைத்த ஈரான்.. பதறும் உலக நாடுகள்.. இந்தியாவுக்கும் ஆபத்து..

Vignesh

Next Post

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்... இன்று நடைபெறும் சிறப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Thu Jun 26 , 2025
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் இன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு 18.06.2025 […]
Post Office Special Scheme.jpg

You May Like