எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவாக இருப்பதாகவும் கூறினார். மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக போட்டியிடுகிறது, எனவே அதிமுகவில் இருந்து தான் முதல்வர் என்று கூறி ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.
காரணம், எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று குறிப்பிடாமல் அதிமுகவில் இருந்து வருவார் என்று அமித்ஷா கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் இல்லையா என்ற கேள்வி வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்த உடனே திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. முருக பக்தர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதை பார்த்து திமுகவினர் நடுக்கத்தில் உள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணியை எந்த காலத்திலும் பிளவு ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டணி ஆட்சியில் பங்கா என்பது குறித்து அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளரா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆம், அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறினார்.
Read More : திமுக பொதுச் செயலாளராகும் உதயநிதி..? துரை முருகன் மீது ஸ்டாலின் அதிருப்தியாம்..!!