Alert: 24-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு… இந்த மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை..!

cyclone rain 2025

வங்கக் கடலில் 22-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு அல்லது வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 22-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி ஒருசில இடங்களிலும், 22 முதல் 25-ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 23-ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 24-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டங்களும், காரைக்கால் பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்!. மியான்மரில் 71% கிணறுகள் விஷமாகிவிட்டன!. 1 கோடி மக்களுக்கு ஆபத்து!. WHO எச்சரிக்கை!.

Thu Nov 20 , 2025
மியான்மரின் அயேயர்வாடி டெல்டாவின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. குடிநீரில் உள்ள ஆர்சனிக் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, இப்பகுதியில் உள்ள 71% ​​கிணறுகளில் பாதுகாப்பான வரம்புகளை விட ஆர்சனிக் இருப்பதாகவும், இதனால் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆர்சனிக் என்பது As என்ற குறியீட்டையும், அணு எண் 33யும் கொண்ட […]
myanmar Arsenic

You May Like