அடுத்த ஷாக்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை..! 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..

murder

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் மதுரை நகரையே அதிரவைத்துள்ளது.


முதற்கட்ட தகவலின்படி, சித்திரை திருவிழா காலத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவன் குறிவைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முத்துமணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த கொலையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த குபேந்திரனை அவர்கள் தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் உடலை முதல் தளத்திலிருந்து கீழே வீசியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயல் நகர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவன் மீதும் சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. மாநிலத்தில் குற்றங்கள் குறைந்து வருவதாக காவல்துறை கூறினாலும், தினமும் சில கொலை சம்பவங்கள் பதிவாகி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நகரை அதிரவைத்த இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: எபோலாவை சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO..! எந்தெந்த நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளன..? இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும்..?

Next Post

ஈரான் ஒப்பந்தத்தில் முன்னேற்றம்.. ஆனால் ஹோர்முஸ் மீதான முற்றுகை தொடரும்..! ட்விஸ்ட் வைத்த டிரம்ப்..!

Mon May 25 , 2026
மத்திய கிழக்கில் பதட்டங்களைக் குறைப்பதையும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இராஜதந்திர ஒப்பந்தமாக மாறக்கூடிய ஒன்றை நோக்கி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சீராக நகர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் கடுமையாக எழுதப்பட்ட ஒரு பதிவில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் 2015-ல் ஏற்படுத்தப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை […]
trump n

You May Like