மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். […]

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் மதுரை நகரையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, சித்திரை திருவிழா காலத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவன் குறிவைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முத்துமணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த கொலையில் ஈடுபட்டதாக தகவல்கள் […]