சமூக ஊடகங்களில் ‘ரூ. 370 பிரியாணி’ சர்ச்சை தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், உணவு விநியோக நிறுவனமான ‘ஜொமேட்டோ’ (Zomato) தனது செயலி வழியாக ‘சம்மதம்’ (consent) தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் பரவியது..
ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரணித் மோரின் நிகழ்ச்சியில் முதலில் ஒரு வேடிக்கையான சம்பவமாகத் தோன்றிய ‘ரூ. 370 பிரியாணி’ குறித்த பேச்சு, விரைவில் டேட்டிங் கலாச்சாரம், சம்மதம் மற்றும் நவீன உறவுகளில் உள்ள எதிர்பார்ப்புகள் குறித்த பெரிய விவாதமாக மாறியது.
இந்த சர்ச்சை தீவிரமடைந்தபோது, சமூக ஊடகப் பிரபலங்கள் இதில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முன்வந்தனர். இதனிடையே, உணவு விநியோக நிறுவனமான ஜொமேட்டோவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் பரவியதால், அந்த நிறுவனமும் இந்த விவகாரத்தில் சிக்கிக்கொண்டது.
ஜொமேட்டோ விளக்கம்
சர்ச்சையைத் தொடர்ந்து இணையத்தில் பரவிய அந்த ஸ்கிரீன்ஷாட் விவகாரத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜொமேட்டோ திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிறுவனம், “ஒரு முக்கியமான விளக்கம்” என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளது.. அதில் ‘பிரியாணி என்பது இரவு உணவு, அது சம்மதம் அல்ல.’ எங்கள் பெயருடன் நீங்கள் பார்த்திருக்கக்கூடிய அந்த விரும்பத்தகாத அறிவிப்பு அடங்கிய ஸ்கிரீன்ஷாட் போலியானது. அதை நாங்கள் எழுதவோ அல்லது அனுப்பவோ இல்லை.” என்று தெரிவித்துள்ளது..
இணையத்தில் வைரலான அந்த ஸ்கிரீன்ஷாட்
சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்ட அந்தப் படத்தில், “பிரியாணி அனுப்பவா? வெறும் ரூ. 370 தான்” என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு காணப்பட்டது. பயனர்கள் இதனைத் தற்போது நடந்து கொண்டிருக்கும் சர்ச்சையுடன் தொடர்புபடுத்தியதால், அந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாகப் பரவியது.
ரூ. 370 பிரியாணி விவாதம் எப்படித் தொடங்கியது?
நகைச்சுவைக் கலைஞர் பிரணித் மோரின் ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவை நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன் உரையாடிய போது இந்த சர்ச்சை தொடங்கியது.. வைரலான அந்த வீடியோவில், ஹிமான்ஷு ஜங்ரா என்று அடையாளம் காணப்பட்ட பார்வையாளர் ஒருவர், ரூ. 370 மதிப்புள்ள சிக்கன் பிரியாணியை மையமாகக் கொண்ட ஒரு டேட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அந்த உரையாடலின் போது, உணவிற்கான கட்டணத்தைச் செலுத்தியதால், தான் டேட்டிங்கிற்கு அழைத்துச் சென்ற பெண்ணிடமிருந்து தனக்கு ஏதோ ஒன்று திரும்பக் கிடைக்க வேண்டும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். அதாவது, ரூ.370க்கு பிரியாணி வாங்கிக் கொடுத்த நான், அதற்கு பதில் உடலுறவில் இருந்து வசூல் செய்ய வேண்டாம் என்று பேசினார்.. அவரின் இந்த பேச்சுக்கு அரங்கில் சிரிப்பலை எழுந்தது..
இந்தக் கருத்து இணையத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.. டேட்டிங்கின் போது பணம் செலவழிப்பது நெருக்கம் அல்லது சம்மதம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்குகிறது என்ற எண்ணத்தை பல சமூக ஊடகப் பயனர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
Read More : அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? உங்கள் கைகளின் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளது என்பது தெரியுமா?



