தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. சென்னை தலைமை செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.. மேலும் பெரம்பூருக்கு இயக்கப்படும் 29 ஏ புதிய பேருந்தில் ஏறி முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்..
அவருடன் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்திபனும் பயணம் செய்தார்.. புதிய பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் முதல்வர் விஜய் கலந்துரையாடினார். சென்னை மாநகரப் பேருந்தில் அமர்ந்த படியே வீடியோ எடுத்துக் கொண்டே முதல்வர் விஜய் பயணம் செய்தார்.



