இந்திய வரலாற்றிலேயே முதன்முறை..!! அனுமதி வழங்கியது மத்திய அரசு..!! வேலையை ஆரம்பித்த RBI..!!

Money 2026

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன.


ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தலா 100 கோடி எண்ணிக்கையிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து வெளியிட ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீரில் நனையாது, எளிதில் கிழியாது என்பதால் அவை நீண்ட காலம் உழைக்கும் திறன் கொண்டவை.

இதன் மூலம் புதிய நோட்டுகளை அடிக்கடி அச்சடிக்கும் செலவும் சிரமமும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில் மேலும் பல மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதேவேளையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாக திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் நோட்டுகள் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. காகித நோட்டுகளை முழுமையாக ஒழிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், இது ஒரு ஆரம்பக்கட்ட சோதனை முயற்சியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

Read More : முதல்வர் விஜய் அடுத்த பாய்ச்சல்..!! பிரதமர் மோடிக்கு அவசர கடிதம்..!!

Next Post

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கையால் உச்சகட்ட பதற்றம்..!

Tue Jul 28 , 2026
ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் நாடு முழுவதும் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், கடலோரப் பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, […]
Tsunami 2026

You May Like