“இது என்ன மருத்துவப் படிப்பா?”. NLC நிறுவனத்தை வெளுத்து வாங்கிய சௌமியா அன்புமணி!.

sowmiya anbumani minister keerthana

தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,”தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று கூறினார். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள்.


நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எதற்கு என்எல்சி தேர்வு வைக்க வேண்டும். மண்ணின் மைந்தர்கள் அவர்கள். என்எல்சி கொடுக்கிற தகவல்கள் எல்லாமே உண்மைக்கு புறம்பான தகவல். விவசாயிகளுக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை என்றார்.

என்எல்சி நிறுவனம் குறித்து உண்மையாகவே பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.
சிஎஸ்ஆர் நிதியில் இருந்து ஒதுக்காமல் இதுவரை நிறைய பிரச்சனைகளை செய்திருக்கலாம். அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி வந்து 3 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. கமிட்டி அமைத்திருக்கிறோம். முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக தகவல்கள் விரைவில் வழங்கப்படும். கண்டிப்பாக நாங்கள் யாருக்கு எதிராகவும் நடந்துக்கொள்ள மாட்டோம். விவசாயிகளுக்கு கண்டிப்பாக ஆதரவாக இருப்போம். மக்களுக்கும் ஆதரவாக இருப்போம். என்எல்சி நிறுவனம் அப்படி இருப்பது உண்மையானால் தவெக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

1newsnationuser5

Next Post

"அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை"!. மாறிய மோதல் போக்கு!. டி.கே.சிவகுமாரிடம் ஏற்பட்ட மாற்றத்துக்கு என்ன காரணம்?.

Thu Aug 20 , 2026
சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை […]
cmvijaydksmeeting

You May Like