“எனக்கு புருஷனும் வேணும்.. கள்ளக்காதலனும் வேணும்!” போலீசாரையே திணற வைத்த பெண்!

WhatsApp Image 2026 08 25 at 2.49.01 PM

கள்ளக்காதல் விவகாரங்களில் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சினையாக மாறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அஞ்சுவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த தொடர்பு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுபம் வீட்டில் இல்லாத நேரங்களில் நிதின் அங்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிகிறது. இதுபற்றி கணவருக்கு தெரியவந்ததும், அவர் அஞ்சுவை கண்டித்துள்ளார். ஆனால், நிதினுடனான தொடர்பை கைவிட அஞ்சு மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவரின் எதிர்ப்பையும் மீறி நிதினை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை அதிகரித்த நிலையில், சுபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுபம், அஞ்சு மற்றும் நிதின் ஆகிய மூவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சுபம் தனது நிலைப்பாட்டை போலீசாரிடம் தெளிவாக தெரிவித்தார். அஞ்சு தன்னுடன் வாழ வேண்டும் அல்லது நிதினுடன் செல்ல வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் இருவருடனும் குடும்பம் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அஞ்சுவின் பதில் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரையும் விட்டுவிட முடியாது, நிதினுடனான உறவையும் கைவிட முடியாது என்றும், இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மூவரிடமும் போலீசார் தனித்தனியாக பேசி பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், ஒருவரது நிலைப்பாட்டில் இருந்து மற்றொருவர் விலகாததால் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால், இந்தக் குடும்ப விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ விரும்புவதாக பெண் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 93 வயதிலும் செம ஸ்ட்ராங்! சமீரா ரெட்டியின் தந்தை சொன்ன ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

Saranya

Next Post

முன்னாள் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்டு 5 நாட்களாக பலாத்காரம்..!! பதுங்கு அறையில் வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

Tue Aug 25 , 2026
பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் பகுதியில், முன்னாள் மனைவியை கடத்திச் சென்று 5 நாட்களாகப் பதுங்கு அறையில் சங்கிலியால் பிணைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் திருமண உறவை முறித்துக்கொண்ட 24 வயதான செவிலியர் எமிலியானே தமாரா, தனது இரண்டு குழந்தைகள் குறித்துப் பேசுவதற்காக முன்னாள் கணவரான அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவை சந்திக்க சென்றபோது மாயமானார். அவரை […]
Crime 2026 4

You May Like