சூடானில் ஆயுதக்குழு தாக்குதல்..! 4 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு..!

sudan war1

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.


குவார்டாட் மற்றும் அபு ஹமாமா உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 27 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு துணை ராணுவப்படையுடன் இணைந்து செயல்படும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கிராமப்புறங்களில் நடைபெறும் ஆயுதத் தாக்குதல்களும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Also Read :ஹைதியில் பயங்கரவாத கும்பல் தாக்குதல்! 47 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் கடத்தல்!. அதிர்ச்சி தகவல்!

maha

Next Post

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு..!பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

Wed Aug 26 , 2026
தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்று நோயாகும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் H1N1 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திடீரென ஏற்படும் […]
flu fever

You May Like