Nepal Floods | நேபாள பெருவெள்ளத்தில் 57 தமிழர்கள் சிக்கித் தவிப்பு..!! பீகார் மாநிலத்துக்கும் உச்சக்கட்ட அலர்ட்..!! பதறவைக்கும் காட்சிகள்..!!

Nepal 2026

Nepal Floods | நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி(Bhotekoshi)ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்களும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரை 17 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியவில்லை.

இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு ஆன்மிக பயணம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளனர். இவர்கள் சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

கடந்த 23ம் தேதி 3 வேன்கள் மூலம் 57 பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். நேபாளம் வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1800 309 3793, 80690 09901 மற்றும் 80690 09900 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தை சீரழித்த இந்த பெருவெள்ளம் தற்போது இந்திய எல்லைகளை நோக்கி நகர்ந்து வருவதால், பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, நேபாளத்தில் பாயும் திரிசூலி நதி இந்திய எல்லைக்குள் நுழையும்போது ‘கண்டக் ஆறு’ என உருவெடுப்பதால், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளநீர் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்குள் பீகார் எல்லையான வால்மீகிநகர் கண்டக் அணைப் பகுதியை வந்தடையும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கண்டக் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டிப் பெருக்கெடுத்து வருகிறது.

இதனையடுத்து, கண்டக் மற்றும் கோசி ஆற்றோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணியில் பீகார் பேரிடர் மேலாண்மைத் துறை முழுவீச்சில் இறங்கியுள்ளது. கரையோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் முழு தயார் நிலையில் களமிறக்கப்பட்டு, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Read More : பேரதிர்ச்சி! கண்ணிமைக்கும் நேரத்தில் ஆக்ரோஷமாக பாய்ந்த வெள்ளம்.. அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், பாலங்கள், வாகனங்கள்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..

Next Post

Nepal Floods | நேபாளத்தையே சீரழித்த பேரழிவு..!! திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட என்ன காரணம்..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Wed Aug 26 , 2026
நேபாள நாட்டின் போட்டேகோஷி ஆற்றுப்படுகையில் உருவான திடீர் கோர வெள்ளத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவே முதன்மை காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். Nepal Floods | போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் அப்பகுதியிலிருந்த பல்வேறு கிராமங்களை வாரிச்சுருட்டி அடித்துச் சென்றுள்ளதுடன், சியாப்ருபெசி உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கை […]
Nepal Flood 2026

You May Like