இட்லி, பஜ்ஜி, கேக் போன்ற உணவுப் பண்டங்களை மென்மையாக்க உதவும் சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்), சமையலுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு அன்றாட உடல்நலப் பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருளாக செயல்படுகிறது. இயற்கையிலேயே காரத்தன்மை கொண்ட இது, உடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையைச் சமன் செய்து உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது.
அதிக காரமான உணவுகளால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு, சிறிதளவு சமையல் சோடாவைத் தண்ணீரில் கலந்து குடிக்கும்போது வயிற்றுக் கோளாறுகளுக்கு தற்காலிக தீர்வு கிடைக்கிறது. மேலும், உடற்பயிற்சி செய்யும்போது தசைகளில் உருவாகும் லாக்டிக் அமிலத்தைக் குறைத்து விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் ஆற்றல் அளிப்பதுடன், பற்களில் உள்ள கறைகளை நீக்கி வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் இது பயன்படுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கும், பூச்சிக்கடியால் ஏற்படும் தீவிர அரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் கூட இதன் பயன்பாடு சிறந்த பலனைத் தருகிறது.
இருப்பினும், சமையல் சோடாவை தொடர்ந்து பயன்படுத்துவது உடலின் pH அளவைச் சீர்குலைத்து கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதில் சோடியம் அதிகளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதனைச் சுயமாக எடுத்துக்கொள்வது பேராபத்தை விளைவிக்கும். சருமத்திற்குப் பயன்படுத்தும்போது எனாமல் மற்றும் தோல் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், முறையான மருத்துவ ஆலோசனையுடன் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Read More : முல்லைப்பெரியாறு அணை உடையப் போகுதா? கேரள மாநிலமே அழியும் அபாயம்..!! தமிழக விவசாயிகள் எச்சரிக்கை..!!



