fbpx

7ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர்..!! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்..!!

அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்தபோது, மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது அழுதபடியே பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலக அறையில் வைத்து அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் வெங்கடேஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுப் பள்ளிக்குள் மாணவியை தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி..!! எங்கு தெரியுமா..?

English Summary

அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Chella

Next Post

'ஆண்களுக்கு கட்டாயம் 2 திருமணம்' இந்த விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?

Wed May 29 , 2024
உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், இந்திய கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த நிகழ்வும் அதற்கான காரணங்களும் விசித்திரம்தான். இந்த சிறிய கிராமத்தின் பெயர் தேராசர். இங்கு சுமார் 600 பேர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் குறைந்தது இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த வழக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தைத் தெரிந்துகொள்வது இன்னும் விசித்திரமாகவோ ஆச்சரியமாகவோ இருக்கும். இந்த தேராசர் கிராமத்தில் […]

You May Like