அலைமோதும் கூட்டம்..!! ஏப்ரல் 23ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Read More : மக்களவை தேர்தல்..!! பிரச்சாரம் முடியும் நேரம் மாற்றம்..!! சத்யபிரதா சாகு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Chella

Next Post

BREAKING: திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்- பிரதமர் மோடி..!

Mon Apr 15 , 2024
திமுகவிற்கு எதிராக மக்கள் திரண்டிருப்பது பாஜகவிற்கு சாதகம் என பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார். ANI செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் சின்ன பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் சனாதன தர்ம விவகாரத்தில் பொதுமக்கள் திமுகவிற்கு எதிராக கோபத்தில் உள்ளார்கள். திமுக மீது உள்ள மக்களின் கோபம், பாஜகவிற்கு சாதகமாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் உள்ளது. […]

You May Like