பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை அதே பகுதியைச் சார்ந்த ஜான்சன்(30) தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் நேரடியாக வீட்டிற்கு கூட்டிச்செல்லாமல் அந்தப் பகுதியில் காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு அழைத்துச் சென்ற அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய மிரட்டி இருக்கிறார். சிறுமியை விடாமல் மிரட்டி அவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சிறுமியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி அனுப்பி இருக்கிறார் அந்த நபர். இதனால் பயந்து போன சிறுமி தன் தாயிடம் வந்து நடந்த விஷயங்களை கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தி ஜான்சன் தான் குற்றவாளி என உறுதியானதால் அவரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பெற்றோர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெரிந்த நபர்களே இது போன்ற பள்ளிச் சிறுமிகளிடம் வரம்பு மீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை விதைத்து இருக்கிறது.