நாடெங்கிலும் ஹோலி பண்டிகைகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது வட மாநிலம் ஒன்றில் ஹோலி பண்டிகையின் போது நடந்த மோதலை பற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹோலி பண்டிகை என்பது இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் மதங்களைக் கடந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இந்தக் கொண்டாட்டங்களின் அப்போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இது மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை கடந்து கொண்டாடப்பட்டாலும் சில நேரங்களில் மோதல்களில் சென்று முடிந்து விடுகிறது.
அதுபோன்ற ஒரு சம்பவம் தான் வடமாநிலம் ஒன்றில் நடைபெற்றிருக்கிறது. அங்கே ஹோலி பண்டிகையில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் அப்பகுதியைச் சார்ந்த சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த புர்கா அணிந்த பெண்மணியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி ஒன்று இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும் புர்கா அணிந்த பெண்கள் சாலையில் நடந்து போகும் போது அவர்கள் கலர் தண்ணீர் நிரப்பட்ட பலூன்களை அவர்கள் மேல் தாக்குவது போலவே எரிந்திருக்கிறார்கள். இவற்றைப் பகிர்ந்திருக்கும் பெண்மணி ஒருவர் மதங்களின் பெயரால் இன்னும் என்னென்ன தீவிரவாத செயல்களில் ஈடுபடுவீர்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதான் பண்டிகைகளை கொண்டாடுவதின் நோக்கமா? அடுத்தவர்களை துன்புறுத்துவதற்காக தான் பண்டிகைகள் கொண்டாடுகிறீர்களா? எனவும் அந்த பெண்மணி கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்தக் காணொளியில் கும்பலாக சேர்ந்து ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் ஒரு பெண்மணியின் வீட்டின் மீது கற்களை எரிந்து தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது .