தன் மனைவியை நண்பர்களுடன் பாலியல் உறவுக்கு வற்புறுத்திய கணவர்.. வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கணவர்..!

கர்நாடக மாநில பகுதியில் உள்ள தனிசந்திராவில் 34 வயதான பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர், கூறியதாவது கடந்த 2011ஆம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், 2015ஆம் ஆண்டிலிருந்து தன் நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு எனது கணவர் என்னை மிகவும் வற்புறுத்தி வருகிறார். அதற்கு நான் மறுத்ததால் மதுகுடித்துவிட்டு என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்துகிறார்.


கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் அவரது நண்பர்களுடன் பலமுறை உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டேன். இவ்வாறு நான் இருந்ததை எனக்கு தெரியாமல் எனது கணவர் வீடியோவாக பதிவு செய்து அதனை வைத்து எனது தங்கையையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றிருக்கிறார். 

இதனை தொடர்ந்து அவரை விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அதன் பின்னர் அவர் எனது அந்தரங்க புகைப்படம் மற்றும் பதிவிட்ட வீடியோக்களை உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக இணைய தளத்தில் பதிவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார். இவ்வாறு கூறி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

முக்கிய ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்! ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Sun Dec 11 , 2022
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்பு புயலாக வலுவடைந்து அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு ஆறுகள், நீர் தேக்கங்கள், அணைகள் உள்ளிட்டவற்றில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. தலைநகர் சென்னையின் நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் மாநில […]
பூண்டி

You May Like