கர்நாடக மாநில பகுதியில் உள்ள தனிசந்திராவில் 34 வயதான பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர், கூறியதாவது கடந்த 2011ஆம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், 2015ஆம் ஆண்டிலிருந்து தன் நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு எனது கணவர் என்னை மிகவும் வற்புறுத்தி வருகிறார். அதற்கு நான் மறுத்ததால் மதுகுடித்துவிட்டு என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்துகிறார்.
கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் அவரது நண்பர்களுடன் பலமுறை உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டேன். இவ்வாறு நான் இருந்ததை எனக்கு தெரியாமல் எனது கணவர் வீடியோவாக பதிவு செய்து அதனை வைத்து எனது தங்கையையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றிருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவரை விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அதன் பின்னர் அவர் எனது அந்தரங்க புகைப்படம் மற்றும் பதிவிட்ட வீடியோக்களை உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக இணைய தளத்தில் பதிவிடுவதாக மிரட்டல் விடுக்கிறார். இவ்வாறு கூறி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர்.