திருநெல்வேலியில் உள்ள பழைய பேட்டையில் இரண்டாவது திருமணமாகியும் முதல் மனைவியை நினைத்து ஏங்கி வந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார் புறம் நடுத்தெருவை சார்ந்தவர் நைனார் இவருக்கு வயது 40. இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் 17 வயதில் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவரை விட்டு விலகிய விஜயலட்சுமி வேறொரு வீட்டில் வசித்து வந்தார்.
இதனால் நைனார் மட்டும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டில் இருந்த மகேஷ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஷ் என்பவருக்கும் கணவர் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். நெருங்கி பழக ஆரம்பித்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான பிறகு மகேஷூக்கும் நயினாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடைபெற்று இருக்கிறது. இந்த சண்டை தொடர்கதையாகவே தொடர்ந்திருக்கிறது. இதனால் முதல் மனைவியே எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறார் நயினார். மேலும் அவர் கஷ்டப்பட்டு மனம் சோர்ந்து இருக்கும் போதெல்லாம் முதல் மனைவியின் புகைப்படத்தை பார்த்து அழுது புலம்புவாராம். சம்பவம் நடந்த தினத்தன்று அவ்வாறே போட்டோவை பார்த்து அழுதிருக்கிறார். இதனால் கோபமடைந்த அவரது இரண்டாவது மனைவி மகேஷ் அவரிடம் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதில் மனம் உடைந்த நயினார் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.