உத்திரபிரதேசம் மாநிலத்தில் தந்தையின் தலையை துண்டித்து மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் திவாரிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கொலையாளியின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து இருக்கின்றனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கோரக்பூர் மாவட்டத்தில் சூரஜ் குந்த் பகுதியைச் சார்ந்தவர் மதுர் குப்தா. இவருக்கு பிரின்ஸ் குப்தா மற்றும் பிரகாஷ் குப்தா என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் பிரின்ஸ் குப்தா கடந்த சனிக்கிழமை இரவு தனது தந்தையை கொலை செய்ததாக பிரசாந்த் குப்தா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்தப் புகார் தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று சகோதரர் பிரின்ஸ் குப்தாவை விசாரித்த காவல்துறை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு தனது தந்தையுடன் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக அவரது கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்து கொலை செய்ததை காவல்துறையிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரின்ஸ் குப்தா. மேலும் அவரது தலையையும் உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தை பணம் கொடுத்திருந்தால் அவரை கொலை செய்திருக்க மாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார் பிரின்ஸ். இது தொடர்பாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.