ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம்..!! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

2006-11இல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Read More : OPS | இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறதா..? ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவால் பெரும் அதிமுகவில் பரபரப்பு..!!

Chella

Next Post

Vijay | திருவனந்தபுரத்தில் இறங்கிய நடிகர் விஜய்..!! அதிர்ந்துபோன ஏர்போர்ட்..!! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..!!

Mon Mar 18 , 2024
14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய், ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest of All Time” என்ற படத்தில் நடித்து வருகிறார். […]

You May Like