Vijay | திருவனந்தபுரத்தில் இறங்கிய நடிகர் விஜய்..!! அதிர்ந்துபோன ஏர்போர்ட்..!! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..!!

14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய், ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest of All Time” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

இந்நிலையில், The Greatest of All Time படத்துக்காக நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக அவர் ஷூட்டிங்கிற்காக வரவுள்ள தகவல் கசிந்ததும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து போஸ்டர்கள், பேனர்கள் என மலையாள திரையுலகினரே திக்குமுக்காடும் அளவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இதற்கிடையே, விஜய் இன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காலை முதலே விமான நிலையத்தில் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மாலை 5 மணியளவில் விமானம் மூலம் கேரளா வந்த விஜய்யை போலீசார் பலத்த பாதுக்காப்புடன் காருக்கு அழைத்துச் சென்றனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது.

முன்னதாக விஜய் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம், அதனைத் தொடர்ந்து காவலன் படத்தின் ஷூட்டிங்கிறாக விஜய் கேரளாவுக்கு சென்றிருந்தார். பின்னர் அவரின் எந்த படத்தின் ஷூட்டிங்கும் அங்கு நடைபெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கேரளாவுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம்..!! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

தேர்தல் பணிக்காக வந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து..? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Mon Mar 18 , 2024
ஆவடி துணை ராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்த 71 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பயிற்சி முடித்து விட்டு மீண்டும் இன்று 5 ராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் துணை ராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில், 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். […]

You May Like