கல்லூரி காதலனுடனான திருமணத்தை நிறுத்திவிட்டு முதியவரை மணந்த இளம்பெண்..!! சுவாரஸ்ய சம்பவம்..!!

கல்லூரி காலத்து காதலனுடனான திருமணம் நின்று போன பிறகு தன்னை விட 24 வயது அதிகம் உடைய முதியவரை மணந்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் அமேண்டா கெனான் (30). இந்த பெண்தான் 54 வயதுடைய டேவிட் ஏஸ் கெனான் என்ற முதியவருடன் வாழ்ந்து வருகிறார். டேவிட் ஏஸிற்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துக்கும் ஆகியிருக்கிறது. அதன் பிறகு திருமணமே செய்துக்கொள்வதில்லை என அவர் சபதமே ஏற்றிருக்கிறார். ஆனால், அமெண்டாவை கண்ட பிறகு அந்த சபதத்தை கைவிட்டிருக்கிறார். அமெண்டாவும் டேவிட் ஏஸும் 4 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், கடந்த 2021இல் ஜனவரியின் போது மணமுடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஏற்கெனவே திருமணமான ஏஸிற்கு 21 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இருப்பினும் முதிய கணவனாக இருப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென டேவிட் ஏஸ் கூறியிருக்கிறாராம். தொடர்ந்து பேசிய அமெண்டா, “வயதில் மூத்தவருடன் பழகும் போது வித்தியாசமானதாகவே இருக்கும். தந்தை மகள் என்றெல்லாம் கருதப்பட்டோம். ஆனால் அவரது மகளை விட 7 வயது மூத்தவள் நான். இருப்பினும் எங்கள் இருவருக்குமான உறவு குறைபாடற்றதாகவே இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார். இதுபோக டேவிட் ஏஸின் வயதை காரணம் காட்டி குழந்தையையும் சாடுவார்கள் என்றெல்லாம் பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் அதில் எல்லாம் உண்மையில்லை. 90% பேர் எங்களுடைய வாழ்க்கைக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்று அமெண்டா கூறியிருக்கிறார்.

முன்னதாக 2017இல் தனது கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்த நபருடனான திருமணம் நின்று போன பிறகு டேவிட் ஏஸுடனான பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார் அமெண்டா. ஏனெனில் அந்த உறவில் நான் நானாக இருப்பதற்கான இடமே கிடைக்கவில்லை. ஆகையாலேயே அந்த கல்யாணத்தை நிறுத்திவிட்டேன் என்கிறார் அமெண்டா. இந்நிலையில், அமெண்டா கருவுற்றிருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

புகைப்படங்களை காண: https://www.instagram.com/p/ClgOTN6OBf6/?utm_source=ig_web_copy_link

Chella

Next Post

அவரைக் கட்டி இழுத்து வந்து இந்த திரைப்படத்தை பார்க்க வைக்க வேண்டும்…..! அண்ணாமலை மீது பாய்ந்த காயத்ரி ரகுராம்…..!

Sun Feb 19 , 2023
பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலால் காயத்ரி கிராமம் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு பாஜகவிற்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் அவர் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]
’என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி’..!! ’விரைவில் களத்தில் சந்திப்போம்’..!! காயத்ரி ரகுராம் சவால்..!!

You May Like