பாஜகவில் அதிரடி மாற்றம்!. புது ரூபத்தில் தேசியக் குழு! தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கடேசனுக்கு தேசியச் செயலாளர் பதவி!.

pm modi new

நிதின் நவீன் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு மத்திய அமைப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய அமைப்பில் மொத்தம் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தொடர்கின்றனர். இவர்களுடன் ராம் மாதவ், தீரத் சிங் ராவத், டி. புரந்தேஸ்வரி, பாரதி பிரவீன் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஆர்யா, வர்ஷாபென் தோஷி, எம். நாகராஜா மற்றும் மதுசந்திர கர் ஆகியோர் புதிய துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், சௌதன் சிங், சரோஜ் பாண்டே, டி.கே. அருணா உள்ளிட்ட சிலர் இந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 8 தேசிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். வினோத் தாவ்டே, சுனில் பன்சால், பிப்லப் குமார் தேப், சதீஷ் பூனியா, கஜேந்திர படேல், ஹரீஷ் துவிவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோரும் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) பொறுப்பில் பி.எல். சந்தோஷ் தொடர்ந்து நீடிக்கிறார்.

கட்சியின் 16 தேசிய செயலாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவிதா படிதார், கே. சுரேந்திரன், போலா சிங், பிரதீப் வர்மா, பாங்னான் கோன்யாக், அனில் அந்தோணி, சந்தீப் பாதக் மற்றும் மனோஜ் டிக்கா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன், 16 தேசியச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கட்சியின் தேசிய பொருளாளராகவும், தருண் சுக் மத்திய அலுவலகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக ரூப் குமாரி செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ‘கடந்த பதவிக்காலத்தில் பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய கட்சிக்கும், தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

”புதிய அணிக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தப் பயணத்தை வெற்றிகரமாகவும் மனநிறைவு அளிப்பதாகவும் அமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன். கட்சியை மேலும் உயர்ந்த நிலைக்கு அவர்கள் கொண்டு செல்லட்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்பில் முக்கிய மாற்றமாக, பாஜகவின் ஐடி பிரிவுத் தலைவராக இருந்த அமித் மால்வியா அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே புதிய ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் அனில் பலூனி தொடர்ந்து நீடிக்கிறார்.

பாஜகவின் மிக இளம் வயது தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நவீன், தனது முதல் முக்கிய மத்திய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். 2027-இல் வரவிருக்கும் உத்திரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு மூடுவிழா..!! அதிர்ச்சியில் ஊழியர்கள்..!! வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tue Aug 18 , 2026
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான ‘கோ-ஆப்டெக்ஸ்’ (Co-optex) நிறுவனத்தின் 10 விற்பனை நிலையங்களை இம்மாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசின் கைத்தறித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 90 ஆண்டுகாலப் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 146-க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் நெசவாளர்களின் […]
Vijay 2026 1

You May Like