தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய தென் மாவட்ட அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரை வந்தடைந்தார். மதுரை வந்த அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீநிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு தங்கினார். இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதன் பிறகு 12 மணி அளவில் மீண்டும் விடுதிக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக நிர்வாகிகள் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு, மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வவ்வால் தோப்பு பகுதியில் அமைந்துள்ள திடலில் நாளை மாலை 4 மணி அளவில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிறகு மாலை 5.30 மணி அளவில் பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து மீண்டும் மதுரை விமான நிலையம் சென்று அடைகிறார்.
Read More: பல பெண்களுடன் தொடர்பு.. கண்டித்த காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..!! சிக்கியது எப்படி..?