அதிரடி அறிவிப்பு…! 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயம்…! ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு…!

12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மின்னஞ்சல்‌ வைத்திருக்க வேண்டும்.

2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ சார்ந்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும்‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும்‌. மேலும்‌ அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ நிலையில்‌ பெரும்பாலான கல்லூரிகள்‌, கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்‌ வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரி இருத்தல்‌ என்பது கட்டாயமான ஒன்றாகும்‌.


மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு:

இவ்வாண்டு 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ ஒவ்வொரு மாணவருக்கும்‌ ஓர்‌ மின்னஞ்சல்‌ முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள்‌ உதவியுடன்‌. அவர்களாகவே உருவாக்கிட தக்க வழிகாட்டி அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களும்‌ மேற்கொள்ள வேண்டும்.

’இனி ஆசிரியர்களின் வருகைப் பதிவு இப்படித்தான் இருக்கும்’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

மாணவர்களுக்கான மின்னஞ்சல்‌ உருவாக்குதல்‌ குறித்த விளக்கக்‌ காணொளி httpsyoutubeelGOCADPmsA லிங்க்‌ மூலம்‌ வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌ அவ்வாறு மின்னஞ்சல்‌ தொடங்க கற்பிக்கும்‌ போது பின்வரும்‌ கூடுதல்‌ விவரங்களையும்‌ வழங்குதல்‌ வேண்டும்‌.

மாணவர்களுக்கான கூடுதல்‌ விவரங்கள்‌:

மின்னஞ்சலை உருவாக்கிய பின்‌ மாணவர்கள்‌ மின்னஞ்சலுக்குள்‌ எவ்வாறு உள்நுழைவது. மற்றவர்களுக்கு மின்னஞ்சல்‌ எவ்வாறு அனுப்புவது. பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது. மின்னஞ்சலில்‌ இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும்‌ கற்பித்தல்‌ வேண்டும்‌.

அவ்வாறு உருவாக்கப்படும்‌ மின்னஞ்சலின்‌ கடவுச்சொல்லை மாணவர்கள்‌ நினைவில்‌ வைத்திருத்தல்‌ வேண்டும்‌. மற்றவர்களுக்கு பகிரக்‌ கூடாது எனவும்‌. இதன்‌ மூலம்‌ மற்றவர்கள்‌ தங்கள்‌ மின்னஞ்சல்‌ கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம்‌ என்கின்ற விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள்‌ வழிகாட்டிடல்‌ வேண்டும்‌.

ஆசிரியர்களின்‌ வழிகாட்டுதல்‌ மூலம்‌ மாணவர்கள்‌ புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான்‌ புதிய மின்னஞ்சல்‌ முகவரியினை பெற்றேன்‌” என்றும்‌ உயர்கல்வியில்‌ மாணவர்களின்‌ இலக்கு என்னவாக இருக்கின்றது என்கின்ற விவரத்தினை மாணவர்கள்‌ மின்னஞ்சல்‌ வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல்‌ வேண்டும்‌.

Vignesh

Next Post

மாற்றம்...! இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி...! இவர்களுக்கு மட்டுமே அனுமதி...! அரசு புதிய உத்தரவு...!

Sat Jan 7 , 2023
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் . இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முன் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. காளைகள் […]
jallikattu

You May Like