உடல் நசுங்கி 3 பேர் பலி! திருச்சியில் நடைமேடயின் மீது ஏறிய கார்! பரபரப்பு சம்பவம்!

திருச்சியில் நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் உடல் நசுங்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் அருகே நடைமேடையில் யாசகர்கள் நேற்றிரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் படுத்திருந்த யாசகர்களின் மீது ஏறி இறங்கியது. இந்தக் கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர விபத்து தொடர்பாக திருச்சி பாலக்கரையைச் சார்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அஸ்வந்த் ஆகிய இருவர் திருச்சி போலீசார் ஆல் கைது செய்யப்பட்டுள்ளனர் . யாசகர்களின் மீது கார் மோதிய சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது . மக்களிடமும் வாகன ஓட்டிகள் இடமும் சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க முடிவதில்லை. காவல்துறையினரும் மக்களை மிதமான வேகத்துடன் வாகனங்களை செலுத்த தான் சொல்கின்றனர். ஆனால் பொதுமக்களும் ஓட்டுனர்களும் அவற்றை செவி கொடுத்து கேட்காமல் அதிவேகமாகச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

1newsnationuser5

Next Post

சற்றுமுன்: இந்திய எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

Sun Mar 12 , 2023
தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் நியூசிலாந்து […]
IMG 20230312 WA0054

You May Like