இத்தாலி நாட்டின் ஒரு நகரத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து தண்ணீரில் மிதக்க விடும் வினோதமான தண்டனை நடைமுறையில் இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காக இப்படியான வினோதமான தண்டனை அந்த நகரில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தண்டனையானது பார்ப்பதற்கும் கேள்விப்படுவதற்கும் ஒரு தீவிரமான தண்டனை போல் இருந்தாலும் அம்மக்கள் இதனை ஒரு கேளிக்கை சம்பிரதாயமாகவே பின்பற்றி வருகின்றனர். இந்த வினோதமான சம்பவம் இத்தாலியின் டிரெண்டோ நகரில் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த டிரெண்டோ நகரில் பின்பற்றப்படும் டான்கா என்ற வழக்கம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கென்று ஒரு நீதிபதியும் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அரசியல்வாதிகள் தங்களது தவறுகளை உணர வேண்டும் என்பதற்காக ஒரு கேளிக்கை சம்பவமாக இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒரு கூண்டுக்குள் வைத்து பூட்டி ஒரு சில வினாடிகள் அவர்களை தண்ணீரில் இறக்கி விட்டு பின்னர் குண்டினை மேலே தூக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்து தண்ணீரில் இறக்கி விடப்படும் நிகழ்வு தவத்தின் நீதிமன்றம் என அங்கு அழைக்கப்படுகிறது. இது அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்லாமல் ஊரில் பிரபலமாக இருக்கும் எந்த ஒரு நபர்கள் தவறு செய்தாலும் இந்தக் கேளிக்கை தண்டனை அவர்களுக்கும் அளிக்கப்படுகிறது.