டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நபர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சார்ந்தவர் சுதிப்டோ கங்குலி. 44 வயதான இவர் ஐடி துறையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் தனிஷ்க் என்ற மகனும் இருந்தனர். இவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .
இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் இந்த மூன்று பேரையும் காணவில்லை என அந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களது வீட்டில் சென்று சோதனை செய்த போது மூன்று பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலை கைப்பற்றிய காவல் துறை அதனை பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் சுதிப்டோ கங்குலி தனது மனைவி மற்றும் மகனை பிளாஸ்டிக் பைகளை முகத்தில் போட்டு இருக்கி அவர்களது சுவாசத்தை தடை செய்து கொலை செய்திருக்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கான அடையாளங்கள் அவர்களது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது மனைவி மற்றும் மகன் ஆகியோர் இறந்த பிறகு இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.