மாமூல் வாங்கியவர் அண்ணாமலை கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்பவர்களிடம்  பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்குபவர் தான் இந்த அண்ணாமலை. அப்படிப்பட்ட அண்ணாமலை எங்களின் ஆளுமை மிக்க தலைவரைப் பற்றி பேச தகுதியற்றவர்” என கூறினார்


மேலும், “ எங்களது தலைவர் இந்தியாவில் யாரையும் சென்று பார்த்ததில்லை. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களில் குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் உட்பட அனைவரும் போயஸ் கார்டனில் வந்து தலைவரை பார்த்துச் சென்றுள்ளனர், அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி பேச முன்னாள் காவல் அதிகாரிக்கு எந்த யோகிதையும் இல்லை. அதிலும் குறிப்பாக ஊழலைப் பற்றி பேச தமிழ்நாடு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் பாஜக தலைவர் என்பது அவருக்கு தெரியாது, அப்போது எதாவது போலீஸ் ஸ்டேசனில் மாமூல் வாங்கிக்கொண்டு இருந்திருப்பார், அப்போதெல்லாம் இவர் கட்சியில் இல்லை” என கூறினார். 

மேலும், ”ஊழலைப் பற்றி பேசு அண்ணாமலை, உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற முதலமைச்சர் இவர் பிரச்சாரத்துக்குச் சென்ற கர்நாடக பாஜக முதலமைச்சர் தான். ஊழலைப் பற்றி பேசவும் அதிமுகவைப் பற்றி பேசவும் அருகதையற்றவர் அண்ணாமலை. மேலும், பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி அவர்கள் தலைமையிலான கூட்டணி தொடரவேண்டும் என கூறியபோது அண்ணாமலை தனது வாயை எங்கு வைத்துக்கொண்டு இருந்தீர்கள்” என மிகவும் ஆவேசமாக பேசினார். 

அதேபோல், “அதிமுக பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள், உங்களை நாங்களா இழுத்து பிடித்துக்கொண்டு இருக்கிறோம், நாங்கள் உங்களைப் பிடித்து தொங்கவில்லை” என கூறியுள்ளார்

RUPA

Next Post

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் அதிமுகவினர் எடுத்த அதிரடி முடிவு…..! பாஜக தேசிய தலைமையின் முடிவு என்ன….?

Tue Jun 13 , 2023
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒன்று இணைந்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தில் அதிமுக தலைமை புகார் வழங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை. என்றால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்க்கட்சித் […]
எம்ஜிஆர் சிலையிடம் ராஜினாமா கடிதம்..!! கதறி கதறி அழுத அதிமுக பிரமுகர்..!! என்ன காரணம்..?

You May Like