உங்களுக்கு வெட்கமே இல்லையா..? திமுகவின் வாக்குறுதி வெறும் காகிதம் மட்டும்தான்..!! விளாசிய அண்ணாமலை..!!

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற மக்களவை தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது மக்களவை தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் கொடுத்திருக்கிறது திமுக.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : மாதம் ரூ.75,000 சம்பளத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் பணியிடங்கள்..!! இன்றே கடைசி..!!

Chella

Next Post

BREAKING | அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Wed Mar 20 , 2024
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அங்கித் திவாரியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கித் திவாரி 2 […]

You May Like