ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சத்யா, கம்பெனி, பூட், கோவிந்தா கோவிந்த போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம். உண்மையான சம்பவங்கள் மற்றும் மனிதர்களை அடிப்படையாக கொண்டு தான் படங்களை இயக்கினாலும், சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் ராம் கோபால் வர்மா. அதே போல் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை […]

அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி ( LIC ) நிறுவனம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பாசிலிகளை செயல்படுத்தி வருகிறது.. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் எல்.ஐ.சி பாலிசிகளை முதலீடு செய்து வருகின்றனர்.. ஆனால் இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியத்தைச் செலுத்த வங்கி அல்லது எல்ஐசி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இனி எல்.ஐ.சி பிரிமீயம் செலுத்து எங்கும் அலைய வேண்டியதில்லை.. இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் முறையில் பணம் […]

பயணிகள் தவறான நடத்தை தொடர்பாக புகார் தெரிவிக்காததற்காக, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிஸில் இருந்து புது டெல்லிக்கு வந்த ஏர் இந்தியாவின் AI-142 விமானத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒரு சம்பவத்தில் ஒரு பயணி, விமான பணியாளர்களின் அறிவுரைகளை கேட்காமல் குடிபோதையில் கழிவறையில் […]

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திகழ்கிறது.. இந்த கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.. இதனை முன்னிட்டு மலைக்கோவில் உள்ள தங்க விமானம், தங்க சப்பரம், தங்க மயில், தங்க தேர் மற்றும் பிரகாரங்களில் உள்ள சுவாமி […]

உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது… 500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் ப்ளூம்பெர்க் சமீபத்திய உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளது.. அவரின் நிகர சொத்து மதிப்பு, 188 […]

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக இணைப்பு நடக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா “ ஒரு கட்சியில் 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது.. திமுகவில் அப்படி முடிவெடுக்கலாம்.. ஆனால் அதிமுக மிகப்பெரிய கட்சி.. பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை.. இதை புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்திக்க […]

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது.. நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் காட்டுகிறது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]

கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் இந்தியர்கள் அங்கு தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 200,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் […]

கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கு அதிவேகமாக பரவும் நோரோவைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் நோரோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. கொச்சியில் உள்ள காக்கநாடு என்ற பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த […]

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு […]