தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், மத்திய அரசு, கோடிக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் இலவச மற்றும் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.. ரேஷன் கார்டு ஒரு சிறப்பு அடையாள ஆவணமாகவும் செயல்படுகிறது.. இருப்பினும், சலுகைகளைப் பெற, கார்டுகளின் e-KYC-ஐச் செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. போலி ரேஷன் கார்டுகள் மற்றும் மோசடிகளை தடுக்க ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் e-KYC-ஐச் செய்ய அரசாங்கம் கட்டாயப்படுத்தியிருந்தது. முதல் […]

ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் அவதி அடைந்தனர்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது… மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் 10க்கும் நகரங்களில் உள்ள மக்கள் இரவு 8:10 மணியளவில் மொபைல் சிக்னல்கள் மற்றும் இணைய அணுகலை இழந்தனர். மொபைல் போன்கள் “Emergency Calls Only” என்ற சிக்னலை காட்டியதாக ஆயிரக்கணக்கான […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.72,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் […]

அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இதற்கு விதிவிலக்குகள் எதுவும் இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், […]

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்து வரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும், இல்லையேல், அவர்களுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் […]

வரதட்சணை கொடுமையால் கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது இதே போன்றதொரு சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபிலா மேரி என்ற பெண்ணுக்கும் நிதின் ராஜுக்கும் 26 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.. 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.. பெண் வீட்டார் […]

ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கான முதன்மை வருமான ஆதரவுத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 20வது தவணைக்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிகழ்வின் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, விவசாயிகள் தங்கள் பயனாளிகளின் நிலையைச் சரிபார்த்து, அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதையும், பிரதம மந்திரி கிசான் […]

பிரபல யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெக் பாஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான பிரபல யூடியூபர் சுதர்சன், டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனலையும் நடத்தி வருகிறார். மொபைல் போன்கள், லேப்டாப், ஹெட் செட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து யூ டியூபில் விமர்சனம் செய்து இவர் பிரபலமானார். இதனிடையே சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்து […]