தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், விளாத்திகுளம் கிராமம், வேம்பார் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், வேலிடுபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி. மாரியம்மாள் க/பெ.வலியன் என்பவர் விளாத்திகுளம் பேரூராட்சியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 05.11.2025 அன்று […]

மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பை (KTS 4.0) ஏற்பாடு செய்ய உள்ளது சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்). பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியான இந்த ஒரு மாத கால கலாச்சார மற்றும் அறிவுசார் சங்கமம், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்பைக் கொண்டாடுகிறது. டிசம்பர் 2, 2025 அன்று தொடங்கும் இந்த நிகழ்வு, ராமேஸ்வரத்தில் ஒரு பிரமாண்டமான […]

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 31, 2025 வரை […]

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, […]

இந்து சமய அறநிலையத் துறை முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில்: ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மேற்கு மதில்சுவர் அருகே கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரஅடி பரப்பில், நவம்பர் 14-ம் தேதி முதல் 2026 ஜனவரி 12-ம் தேதி வரை 60 நாட்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து […]

எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். அந்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், மாயாவிகள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் வாக்காளர் பட்டியல் […]

செங்கோட்டையனுக்கு பின்னால் திமுக இருக்கிறது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற வந்தேமாதரம் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் வந்தேமாதரம் பாடும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் அளித்த பேட்டியை பார்த்ததாகவும், அதில் சரியான […]

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம், இன்றுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம், இன்றுடன் 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் குறிக்கும் வகையில், பாரத அன்னையே நான் உனக்குத் தலை வணங்குகிறேன் என்று பொருள்படும் வகையில் இந்தப் பாடல் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் எண்ணற்ற தலைமுறைகளாக வந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதுடன், நாட்டுப்பற்றையும் உறுதி […]

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், வழிகாட்டுதல்களை உருவாக்கும் வகையில், […]

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]