மும்பை – எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் […]
தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டு கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 6 மாத கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்பளமோ ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு […]
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, […]
சார்பதிவாளர் அலுவலகங்கள் வீடியோ காட்சிகளுடன் சேர்த்து குரல் பதிவுகளையும் கண்காணிக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பதிவுத்துறையில் 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் சொத்து ஆவண பதிவு, திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு ஆவணப்பதிவுகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாகவே டோக்கன் வழங்கப்படுகின்றன.. […]
குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: குஜராத்- வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் […]
தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே தகவல் பரப்பப்படுகிறது. இது வதந்தி. தமிழகத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் ‘பொது வழிபாட்டு தலங்கள்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது […]
பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் (AB-PMJAY) கீழ் நாட்டில் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2022 இல், இந்திய அரசு இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்திருத்தியது, இது இந்தியாவின் மக்கள்தொகையில் […]
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எந்தவொரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும், பெயர்கள் விடுபட்டிருந்தால் கோரிக்கை வைக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யாதவர்கள், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், பற்றிய வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்கள் 2025 ஜூலை 20ஆம் தேதி BLOs/EROs/DEOS/CEOs மூலம் வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட பகிரப்பட்டுள்ளன. SIR உத்தரவுப்படி, […]
தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]
செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும். அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண்/ தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், […]