மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் PTMC – GDMO பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு அனுபவம் இருக்க […]

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “போதை பழக்கமற்ற அமிர்த காலம்” என்ற தேசிய பிரச்சாரத்தை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் தொடங்கியது. ஆரோக்கியமான மற்றும் போதைப் பழக்கம் இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் இந்தப் பிரச்சாரம், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத நாட்டை உருவாக்கும் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும். புகையிலை இல்லா இந்தியா என்ற மக்கள் குழுவின் தொழில்நுட்ப ஆதரவுடன் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் […]

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவா, சுட்டுக் கொல்லப்பட்டபோது, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய நபர் வக்கீலாக மாறுவேடமிட்டு வந்துள்ளார். இந்த தாக்குதலில் மைனர் பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர். பாஜக தலைவர் பிரம்மதத் திவேதி […]

பிரபல தூர்தர்ஷன் செய்தி தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார். பிரபல தூர்தர்ஷன் செய்தி தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் டிடி தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முதல் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அவர் 1970 களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 1975 இல் தூர்தர்ஷனில் சேர்ந்தார். அவர் பிரைம் டைம் செய்தி புல்லட்டின் […]

ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டம் கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டத்தை செயல்படுத்தி சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இத்திட்டத்தின் கீழ், திருநங்கைகள் நான்கு மாவட்ட போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். அதன் படி கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் […]

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசின்‌ நிறுவனமான ஆவின்‌ நிறுவனத்திலேயே குழந்தை தொழிலாளர்கள்‌ பணி அமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள்‌ வெளிவந்துள்ளன. தி.மு.க. அரசின்‌ இந்தச்‌ செயல்‌ வேலியே பயிரை மேய்வதுபோல்‌ உள்ளது. அரசின்‌ இந்த சட்டவிரோதமான செயல்‌ கடும்‌ கண்டனத்திற்குரியது. தனியார்‌ நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசே […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEG திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ ,மானியத்தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 […]

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Country Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 முதல் 11 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]