தினமும் கருப்பு திராட்சையை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அத்தகைய கருப்பு திராட்சையை பாலில் 30 நாட்கள் ஊறவைத்து சாப்பிடுவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். கருப்பு திராட்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 30 நாட்கள் இவற்றை உட்கொள்வது உடலுக்குத் தேவையான […]

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை […]

மக்களவை எதிர்கட்சி தலைவருக்காக அரசு ஒதுக்கிய பங்களாவுக்கு மாற ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெல்லி துக்லக் லேன் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தவர் ராகுல் காந்தி. 2023 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் பதவியை இழந்த ராகுல்காந்தி பங்களாவை காலி செய்து விட்டு தாயார் சோனியா காந்தியின் No.10 ஜன்பத் இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர், நீதிமன்றம் […]

Southwest Airlines விமானத்தில் பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணியின் தலை முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து […]

சொத்து விவகாரத்தில் கலாநிதி உள்ளிட்டோருகு நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாநிதி, தற்போது டிவி சேனல்கள் கைசென்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ச் அணி உரிமத்தை ரத்து செய்ய கோர போவதாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன். திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரும் ஊடக அதிபருமான கலாநிதி மாறனுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த […]

அறிவியல் வளர்ச்சி எத்தனை முன்னேறியிருக்கச் செய்யப்பட்டது என்றாலும், சில தெய்வீக மற்றும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய புதிர்கள் இன்னும் வெளிவரவில்லை. பீகார் மாநிலத்தில் பாஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயில், அவ்வாறானதொரு மர்மமயமான தலமாக இருக்கிறது. ஏற்கனவே 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையுடன் விளங்கி வரும் இந்த கோயில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் அணிவகுக்கும் சக்தி பீடமாக திகழ்கிறது. ஆனால், இக்கோயிலின் மிகப் பெரிய […]

காதல் இரண்டு பேரை ஒன்று சேர்க்கிறது. அது அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வைக்கிறது. பல காதலர்கள் தங்கள் வாழ்க்கையை திருமணத்துடன் மகிழ்ச்சியாகத் தொடங்குகிறார்கள். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக, சில பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதிக்காமல் போகலாம். இதன் காரணமாக, பல காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். காதல் திருமணங்கள் இப்போதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டன. ஆனால் இந்தத் திருமணங்கள் புதியவை அல்ல. அவை புராணங்களிலும் […]

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் உப அறநிறுவனமான சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ( TNHRCE Recruitment 2025 )வெளியாகியுள்ளது. காலிப்பணியிடம்: எழுத்தர், அலுவலக உதவியாலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு: திருக்கோயில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், சமீபத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் திருமணம் ஆன 36 நாட்களில், 22 வயது இளம்பெண் […]

தாம்பரத்தில் உள்ள நன்மங்கலம் ஏரி பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது என்பதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி, ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மனுவை, அப்பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில், நீர் நிலத்தில் […]