ஆன்லைன் கேமிங் செயலி மூலம் அறிமுகமான சிறுமியை கடத்திச் சென்று கொடூர சித்திரவதை செய்த வாலிபரை, செல்போன் சிக்னல் மற்றும் உணவு டெலிவரி முகவரியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் கேமிங் செயலிகள் வழியாக தானேவைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்ற பிபிஏ மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தன்று […]
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் நோக்கில், பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை புதிய வரியை விதிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காலியாகும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற பெயரில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கான […]
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கும் அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கும் வசதியாக, டாஸ்மாக் நிறுவனம் விரிவான கணக்கெடுப்புப் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் மதுக்கடைகள் அமைக்கப்படக் கூடாது. இருப்பினும், பல இடங்களில் […]
யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 தொகைக்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் (MDR) விதிக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில், மின்னணுப் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளும் சேவை நிறுவனங்களும் கட்டணம் […]
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காகவும், அதேபோன்று தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பெரியாறு அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசனத்திற்கு வினாடிக்கு […]
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் […]
காவிரி நீர் நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு சிறிதும் இல்லை. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் பக்கத்து மாநிலத்திடம் பேசி தீர்வு காணும்போது அவமானம் நேரிட்டாலும், மக்களுக்காக அதைத் தாங்கிக் கொள்ளத் தயார்” என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சனும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல், 22 வயது வாலிபரை கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் அஸ்வின் வயது 22. கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அஸ்வினுக்கு விஷ்ணு என்ற நண்பர் இருந்தார். தினமும் இரவு விஷ்ணுவின் வீட்டில் தங்குவது அஸ்வினின் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் […]

