கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது சலுகைதானே தவிர உரிமை அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் அனுஸ்ரீ என்பவரது தந்தை அரசு பணியாளர். இவர் திருவாங்கூர் பகுதியில் உரம் மற்றும் இரசாயன கழகத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். இவர் 1995ல் தனது பணிக்காலத்திலேயே உயிரிழந்தார். இவரதுமனைவியும் கேரளா அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் மனைவிக்கு கருணை அடிப்படையில் அவரது வேலையை தரவில்லை. எனவே தந்தை […]
உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை செய்தது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் என்பது அதை விட அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கொடூரமான வன்புணர்வுக்கு ஆளான […]
ஜம்ம காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைத்துறை டிஜிபியான ஹேமந்த் குமார் லோஹியா , ஜம்முவின் புறநகர் பகுதியில் உதய்வாலா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். டி.ஜி.பி. இருந்த வீட்டில் வேலை […]
கோவையில் நடு ரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இடையர் வீதியில் பேக்கரி அருகே இரவு நேரத்தில் சில இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அவர்களின் வீடியோவை பதிவு செய்து சிலர் அதை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலானது. இது குறித்து வெறைட்டிஹால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியால் […]
ஒரு மனிதனின் வாழ்நாள் முடிவதற்கு இருதய நோய் ஒரு முக்கியமான காரணம். இது அனைத்து வயதினரையும் தாக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்களை அதிக அளவில் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவான நோய் வகைகளில் கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், இதயத் தடுப்பு, இதய செயலிழப்பு, அரித்மியா, புற தமனி நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும். நவீன காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கையுடன் தொடர்புடைய வாழ்க்கை முறை தேர்வுகள் […]
பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் முக்கிய உணவாகும். பாக்டீரியா நொதித்தல் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது தயிர் ஒரு தடிமனான அமைப்பை அளிக்கிறது. கிரீம், சுவையான தயிர் அல்லது தயிர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. தயிரில் உள்ள புரோபயாடிக் […]
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல எவ்வளவு மழை பெய்யுமோ அந்த அளவிற்கு இயல்பான அளவில் மழை பெய்யும் . பருவமழை காலத்தில் இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை […]
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களால் ஏராளமானோர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குகின்றனர். இதனால் விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். ஒரு வேளை அதில் தோல்வியடைந்தால் ஏற்றுக் கொண்டு வெளியேற விரும்புவதில்லை. குறிப்பிட்ட சூதாட்ட செயலிக்கு தங்களை முழு அடிமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏராளமானோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியை நாடுகின்றனர். சிலர் […]
நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு உண்மையான விடைத்தாளை காண்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்மா விக்டோரிய என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஜுலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ம் தேதி வெளியானது. அதில் அந்த மாணவி 196/720 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் […]
டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் யூசூஃப் பதானை ஜான்சன் தாக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது. லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி ஜோத்பூரில் நடைபெற்றது. இத்தொடரில் பில்வாரா கிங்ஸ் , இந்தியா கேபிடல்ஸ் இடையே தகுதித் தேர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது யூசூஃப் பதானுக்கும் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுஞ் சொற்களால் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. […]